கோவை விடியல் சட்ட சேவை மைய துவக்க விழாவில் விடியல் குகனின் தலைமையுரை:
கோவை விடியல் சட்ட சேவை மைய துவக்க விழாவில் விடியல் குகனின் தலைமையுரை: ஒரு தனி மனிதர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மனிதன் ஒரு சமுதாய விலங்கு. சமுதாயத்தில் கலந்து இருந்துதான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. மனிதன் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்கின்ற போது ஒரு ஒழுங்கு முறை தேவை. ஒரு ஒழுங்கு முறை இல்லை என்றால் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மனித குலமே அழிந்து விடும். மனித குலம் அழிந்து விடாமல் நிலைபெற்றிருக்க அந்த ஒழுங்குமுறை அவசியமாகிறது. இதை இதைச் செய்யலாம். இதை செய்யக்கூடாது என்று ஒரு ஒழுங்கு முறை வகுக்க வேண்டி உள்ளது. அந்த ஒழுங்கு முறையை முதலில் தர்மம் என்று அழைத்தார்கள். பிறகு அந்த தர்மம் சட்டம் என்ற பெயரில் உறுதிப்படுத்தப்பட்டது. கரைபுரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்திற்கு இருபுறமும் கரையிட்டு கட்டுப்படுத்துவது போன்று சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் வாழ வகுக்கப்பட்ட கரைதான் சட்டம். சுவர்படத்திற்கு 4 சட்டம் இருப்பதுபோல் வீட்டிற்கு நான்கு சுவர் இருப்பதுபோல் சட்டம் மனிதர்களை சூழ்ந்துகொண்...